இரண்டு முன்னாள் போராளிகளின் தாய்: துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியம் (Video)
தாயகம் கோரிய, ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அதன் சுவடுகள் இன்று வரை மக்கள் மனதில் உள்ளது.
30 வருட போராட்டத்தில் தமிழ் மக்கள் இழந்தது மிக அதிகம், தங்களது சொத்துக்கள், தங்களது உறவுகள், உரிமைகள் என்று அனைத்தும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இறுதியாக யுத்தமும் முடிவுக்கு வந்ததுடன், அன்று அடைந்த துயரங்கள் இன்றும் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் சொந்தங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவு- விசுவமடு தேராவில் கிராமத்தில் தாயக மண்ணிற்காக இரண்டு மாவீரர்களை இழந்த தாய் துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியம்.
மண்ணிற்காக கணவனை இழந்து, ஈன்ற இரு மாவீரர்களை இழந்து, காணாமல் போன மகளை தேடி தனிமையில் வாழும் தாய் ஒருவரின் துயர் மிகுந்த கதையைத் தான் எமது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சியினூடாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan