இலங்கையில் மீண்டும் கெடுபிடிகள்! பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Final War
By Benat Sep 26, 2022 10:46 AM GMT
Report

உள்நாட்டு போர்க்காலத்தில் தாக்குதல்களின் அச்சுறுத்தல் கொழும்பின் பல பகுதிகளை பதற்றநிலைக்கு மாற்றியது. அதேநிலை, இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி, அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுடைய நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பாளர்களின் பட்டியலை அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டியலில் மாற்றம் இருந்தால் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அரசுத் துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பணியாளர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

இலங்கையில் மீண்டும் கெடுபிடிகள்! பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் | Sri Lanka War

இந்தநிலையில் குறித்த பிரதேங்களின் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனையிட பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட உத்தரவுகளின் கீழ் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக தண்டிக்கப்பட்டவர்கள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் 26(2) பிரிவின் கீழ் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கை தனது கடினமான தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அசாதாரணமான நேரத்தில் வந்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் திகதி ஜெனீவா அமர்வுகள் முடிவதற்குள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு ஆதரராக போதுமான நாடுகள் உள்ளன.

இதற்கிடையில், ஜெனீவா வரைவு தீர்மானம், இலங்கையில் மோசமடைந்த கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் இது இலங்கை மக்கள் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை' அங்கீகரிக்கிறது.

இதன் காரணமாக, பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பயணத் தடையை எதிர்கொள்வர். வெளிநாடுகளில் குவிக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்படும்.

அத்துடன் உலகளாவிய அதிகார வரம்பை செயல்படுத்த அதிகாரம் பெற்ற நாடுகளின் சட்ட நடவடிக்கையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US