மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 18 தொழிலாளர்கள் (Photos)
மஸ்கெலியா- நல்ல தண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஸ்சப்பான எமில்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 18 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் மஸ்கெலியா ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும் கர்ப்பிணிப் பெண் உட்பட 13 பெண்கள் அடங்குகின்றனர்.
மலையக தோட்டப்புற பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இவ்வாறு அடிக்கடி குளவிக் கொட்டுக்கு இலக்காகும் செய்திகள் வெளிவருகின்றன.
ஆனால் அதற்கான எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தோட்ட நி்வாகங்கள் இதுவரை செயற்படுத்துவதாக தெரியவில்லை.
நட்டஈடு
அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை குளவிக் கொட்டுக்கு ஆளாகும்போது அவர்களுக்கு எவ்விதமான நட்டஈடும் வழங்கப்படுவதில்லை.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில் இவ்வாறான விபத்துகளில் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் கரிசணைக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.


பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
