பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Rukshy Mar 14, 2025 09:31 AM GMT
Report

இலங்கையில் தற்போது பதிவாகி வரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள விடயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பாதான உலக குழுக்களிடையே எற்படும் பிர்ச்சினைகள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொலைகளாக முடிவடையும் நிலையில், அதன் பின்னணியிலுள்ள கைது சம்பவங்கள் நாட்டு மக்களிடையே பீதியான சூழலை உருவாக்கி உள்ளது.

இவ்வாறான அச்சமான சூழல் உருவாகுவதற்கு முதற் காரணமாக இருப்பது முன்னைய காலத்தில் நாட்டினுடைய பாதுகாப்பு சார் துறையில் பணியாற்றியவர்களே தற்போது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியவர்களாக இருக்கின்றமையே ஆகும்.

அதாவது இராணுவத்திலோ அல்லது பொலிஸ் துறைகளிலோ பணியாற்றியவர்கள் தற்போது நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்களோடு முக்கிய தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர்.

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்

நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் 

இந்த வருட ஆரம்பத்தில் மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்கலாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

இந்த சம்பவத்திற்கான பின்னணியை நோக்கும் போது மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மித்தெனிய முக்கொலைச் சம்பவம்

அடுத்த மித்தெனிய முக்கொலைச் சம்பவம். இந்த கொலைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி இரவு மித்தெனிய கடேவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

கணேமுல்ல துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், துப்பாக்கிச் சூட்டை நடாத்திய பிரதான துப்பாக்கிதாரி 12.12.2019 அன்று இலங்கை இராணுவத்தின் 3வது கொமாண்டோ படைப்பிரிவில் சேர்ந்தவர் என்றும் பொது மன்னிப்பின் கீழ் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

மேலும், கொலைக்கு முன்னரும் பின்னரும் செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவவின் கொலையாளியான கொமாண்டோ சமிந்து தப்பிச் சென்ற வேனை வைத்திருந்ததற்காக அதுருகிரிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 37 வயது கான்ஸ்டபிள் ஹசித ரொஷான் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள். இரண்டு முன்னாள் கொமாண்டோக்கள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரணிலும் பிமலும் ஒரே நிகழ்வில்

ரணிலும் பிமலும் ஒரே நிகழ்வில்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து

இவை அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பின் முக்கிய பதவி நிலையில் இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகி உள்ளார்.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றின் முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது. எனினும் அவர் தலைமறைவாகியுள்ளதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்

இறுதியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் அத்துமீறல்கள் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கல்நேவ பிரதேசத்தை சேர்ந்த கிரிபந்தலகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னர் வேறு ஒரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்கவில் கைது!

புலனாய்வு பிரிவிலும் பல மாற்றங்கள்

இவ்வாறாக, கடந்த சில காலமாக நாட்டில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களையும் அதனோடு தொடர்புடைய பின் புலத்தையும் நோக்கும் போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுடைய செயற்பாடுகள் ஒரு புறம் இருக்க, தற்போது பெண்களது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு | Sri Lanka Security Is In Question

ஒட்டு மொத்தத்தில் இவை அனைத்தையும் வைத்து நோக்கும் போது கடந்த வருடம் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள அநுர அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்வதற்கான திராணியற்ற நிலையில் உள்ளது என முன்னாள் அமைச்சர்களான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

குற்றவாளிகளை கைது செய்தால் தமக்கான அழுத்தம் இன்னும் அதிகரிக்கும் என்தபதனால் அவர்களை இவர்கள் காப்பாற்றுகின்றார்களா என்ற வினாவே தற்போது எழுந்துள்ளதாக மக்கள் தமது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இலங்கையினுடைய சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகின்றது. குறிப்பாக, இராணுவத்திலிருந்து வெளியேறிய அல்லது இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, அரசாங்கம் முறையான சட்டவாக்க பொறிமுறையை உருவாக்கினால் மாத்திரமே நாட்டின் உடைய சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் என புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் பலரால் பலவாறாக கூறப்பட்டாலும் அரசாங்கம் பொலிஸ் கட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வு பிரிவிலும் பல மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

தேர்தல் சட்டம் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்

தேர்தல் சட்டம் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்

சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rukshy அவரால் எழுதப்பட்டு, 14 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5ம் ஆண்டு, 31ம் நாள் நினைவஞ்சலிகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம்

21 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, முரசுமோட்டை, Pickering, Canada

18 Feb, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அடம்பன், மன்னார்

21 Mar, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
நினைவலைகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆறுகால்மடம், Stavanger, Norway

14 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, Scarborough, Canada

15 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Stavanger, Norway

15 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Jaffna, நெடுங்கேணி, கொம்மந்தறை

18 Mar, 2015
மரண அறிவித்தல்

ஊறணி, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US