சீன கப்பல் விவகாரம் - இலங்கையின் IMF செயல்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் யுவான் வாங் 5 என்ற சீன ஆய்வு கப்பலின் வருகையை எதிர்ப்பதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கடனைப் பெறும் நடவடிக்கையில் இலங்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Economic Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொதியை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டு அறிக்கையின் பிரதான கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம்.

இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நடைமுறைக்கு சீனா தனது ஒப்புதலை வழங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
ஆனால், சீனா விரும்பினால், இந்தச் செயற்பாடு நீண்ட காலத்திற்குத் தாமதப்படுத்தப்படலாம் எனவும், இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் துயரமடையக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் வருவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் செயல்முறையுடன் சீனா இணைக்கக்கூடும் என்பது கவலைக்குரிய செய்தி என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam