டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி! நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து குழப்பமடைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ரூபாவின் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் சில வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விலையானது 335 என்ற மட்டத்தை அடைந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ச்சிக்கான காரணம்
மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட நிலைமையே இது. அதனை நிர்வகிப்பதற்கு மத்திய வங்கி செயற்படும்.
இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. டொலரின் விலையானது வழங்கலுக்கும், தேவைக்கும் இடையில் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது மத்திய வங்கி 03 பில்லியன் டொலர்களை வாங்கியுள்ளது. அதனால்தான் டொலர்களின் பெறுமதி இந்த நிலையிலாவது இருக்கிறது. இல்லையெனில் இன்னும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
