இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 310.62 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 313.52 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விற்பனை விலை 332.99 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனது விலையானது 310 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை விற்பனை விலையானது 325 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரிப்பினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.69 ரூபாவிலிருந்து 314.16 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் விற்பனை விலையானது 330 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
Parliament Live
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்