இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 310.62 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 313.52 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விற்பனை விலை 332.99 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனது விலையானது 310 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை விற்பனை விலையானது 325 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரிப்பினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.69 ரூபாவிலிருந்து 314.16 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் விற்பனை விலையானது 330 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
Parliament Live
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri