280 ரூபாவாக டொலரின் மதிப்பு இருந்திருக்க வேண்டும்! தற்போதைய பெறுமதியில் ரகசியம் இருப்பதாக கூறும் பேராசிரியர்
டொலரின் விலை குறைவதற்கு உலக சந்தையில் டொலரின் விலை குறைந்ததும் ஒரு காரணம். இதனால், ரூபாயின் மதிப்பு ஓரளவு வலுவடைந்தது என அரசியல் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் உயர்வுக்கான காரணம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில், கட்டுப்பாடான எரிபொருள் விநியோகத்தால் டொலரின் தேவை குறைந்துள்ளது. இலங்கையில் எரிபொருள் நுகர்வு சுமார் 40% குறைந்துள்ளது. இந்தக் காரணத்தால், தேவை குறைந்ததால், டொலரின் மதிப்பு குறைந்தது.
டொலரின் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம்

இரண்டாவதாக 2022 ல் டொலரை மிதக்க விட்டதன் காரணமாக எதிர்பாராத விதமாக 380 ஆக உயர்ந்தது. ஆனால் உண்மையான மதிப்பு 280 ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.
இன்று டொலரின் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஒரு பிரச்சினை. இது அவசியமில்லை. இன்று இந்த வித்தியாசம் 17 ரூபாய். அப்போதிருந்தது 2-3 ரூபாய். இந்த வித்தியாசத்தில் ஏதோ ரகசியம் இருக்கிறது.
டொலரின் ரூபாய் மதிப்பு குறைந்தால் நல்லது. அப்போது ஒரு டொலரில் கொண்டு வரும் பொருட்களுக்கு குறைவான கட்டணமே செலுத்த வேண்டும். ஆனால் மறுபுறம் டொலர் விலை குறைவினால் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் பெறும் ரூபாயின் அளவு குறைகிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய வங்கி இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். டொலரின் விலை 300-, 310 ரூபாயில் நிறுத்தப்படலாம்.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது இன்று அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டுப் பணம் அனுப்புதலும் அதிகரிப்பது நல்ல அறிகுறி. மறுபுறம், இது அரசாங்கத்தின் நேரடிக் கொள்கைகளின் பண்பு அல்ல. அவை மற்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக ரஷ்யா பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளது. மறுபுறம், எரிபொருள் பங்கீட்டை வழங்குவது இந்த சூழ்நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. IMF கடன் மானியம் கிடைத்தால், இந்த நிலைமையில் உடனடி குறைப்பைக் காட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam