இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மகிழ்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட அரசாங்கம்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டாலும் ரூபாயின் பெறுமதியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தினால் தீர்மானிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்
எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் உலக வங்கியிடமிருந்து கடன் உதவித் தொகையும், ஆசிய வளர்ச்சி நிதியின் கடன் உதவித் தொகையும் பெற்ற பிறகு, பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இது நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, மற்றும் பொருட்களின் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
