இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மகிழ்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட அரசாங்கம்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டாலும் ரூபாயின் பெறுமதியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தினால் தீர்மானிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் உலக வங்கியிடமிருந்து கடன் உதவித் தொகையும், ஆசிய வளர்ச்சி நிதியின் கடன் உதவித் தொகையும் பெற்ற பிறகு, பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இது நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, மற்றும் பொருட்களின் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan