மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு பதில் வழங்கிய இலங்கை
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை பதில் வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த வாரம், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர்-ஹம்டியிடம் 13 பக்க பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளை முன்னிட்டு, இந்த 13 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரதிகள் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகத்திற்கும், ஜெனீவாவில் உள்ள பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் அலுவலகம் (OMP), இழப்பீடு அலுவலகம் (OR), ஒரு விரிவான இடைக்கால நீதி மூலோபாயம், பொறுப்புக்கூறல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் இந்த பதில் அமைந்துள்ளது.
தொற்றுநோய் இருந்தபோதிலும், உள்நாட்டு செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 வது மனித உரிமைகள் பேரவை அமர்வுகள், 2021, செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. இலங்கை உட்பட மூன்று நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில், உயர் ஆணையாளர் மிச்செல் பேச்சலெட்டின் வாய்மொழி அறிவிப்புடன், இந்த அமர்வுகள் ஆரம்பமாகின்றன.
உள்நாட்டு தீர்வு செயல்முறைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், வெளியகப் பொறிமுறையை இலங்கை நிராகரிக்கிறது என்று இந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய ஆணைக்குழுக்களின் கண்டறிதல்களை விசாரணை செய்யவும், பரிந்துரைகளை அமுல்படுத்தவும் இலங்கை தயாராக இருப்பதாக, குறித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் அதன் பணி, முன்னாள் விடுதலைப்புலி கைதிகளுக்கு மன்னிப்பு, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், இராணுவத்தின் வசம் உள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பிற கடமைகளைக் கவனித்தல் உட்பட்ட உறுதிமொழிகளையும் இலங்கை அரசாங்கம் தமது 13 பக்க பதிலில் வழங்கியுள்ளது.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
