போராட்டகாரர்களுக்கு உணவு பொதிகள் விநியோகம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்- செய்தி தொகுப்பு
காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து தினமும் உணவு வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது சம்பந்தமாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது போராட்டகாரர்களுக்கு தினமும் 500 முதல் 600 வரையான உணவுப் பொதிகள், போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அண்மை காலம் வரை வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவருகிறது.
இந்த உணவு இலவசமாக விநியோகிக்கப்பட்டதா அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டதா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இன்னும் மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது மாலை நேர செய்தி தொகுப்பு