ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு
ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து செலவு அறிக்கைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்
இந்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த அறிக்கைகளில் யாருக்கேனும் சிக்கல் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கை கடந்த 13ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
