கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை
வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் தடையின்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஏற்கனவே செயலிழந்துள்ளது.
இலங்கை மின்சார சபை
இது தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தடையாக இருக்குமா என இலங்கை மின்சார சபையிடம் வினவப்பட்டுள்ளது.
தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நுரைச்சோலை
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தற்போது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கமைய, அந்த ஆலையில் தற்போது ஒரு ஜெனரேட்டர் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
