பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - மீண்டும் சர்ச்சைக்குரியவர்கள்
சமகால அரசாங்கத்தில் மேலும் சிலர் அமைச்சரவை அமைச்சர்களாக இன்றைய தினம் பதவியேற்க உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அமைச்சர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பலர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்

இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக 21வது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri