பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - மீண்டும் சர்ச்சைக்குரியவர்கள்
சமகால அரசாங்கத்தில் மேலும் சிலர் அமைச்சரவை அமைச்சர்களாக இன்றைய தினம் பதவியேற்க உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அமைச்சர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பலர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்

இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக 21வது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan