ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri Jul 11, 2022 06:39 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என்று சபாநாயகர் சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

அதனை இன்று அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரணிலிடம் பெரும்பான்மை

ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி | Sri Lanka Political Crisis Ranil Is The President

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், ஜனாதிபதி பதவியை ஏற்குமாறும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளனர்.

இது நடக்குமானால் இதுவரை காலமும் ஜனாதிபதி பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும். எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், ஜனாதிபதி பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர்தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டளஸ் அலகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி 

ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி | Sri Lanka Political Crisis Ranil Is The President

எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்பார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார்.

விக்கிரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை அவர் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக தற்காலிகமாக புதன்கிழமை பதவியேற்பார், இதன் போது நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் - பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர், இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி மாநாடு மூலம் அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது.

அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள், தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.

முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர். எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US