ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள மறதி! நினைவில் வைத்துள்ள மக்கள் - குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சி
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது யார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் ராஜபக்சர்கள் இதனை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மின் கட்டண உயர்வுக்குத் தீர்வு இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு அமைச்சர்களும் தாம் செய்த மோசடிகளிலிருந்து தப்பித்து வெளிவருவதற்கு முன்னுரிமையளிக்கின்றார்களே தவிர, மக்களைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை.
காணி தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. மகாவலி காணியை விடுவிக்க வேண்டாம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தடுப்பதற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்துக்கு தீர்வு இல்லை. தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தெற்கிற்கு மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
பேராசிரியர்களும் ஆசிரியர்களும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியாத கல்வி அமைச்சர், கல்வி முறைமையை மறுசீரமைக்கவுள்ளதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு உளவு பார்த்த நபரை தூக்கிலிட்ட ஈரான்! அதிகரிக்கும் பதற்றம் News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
