ரணிலின் அரசியல் நாடகமே தேசிய பேரவை! - சாடுகின்றது ஜே.வி.பி.
சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசிய பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்தப் பேரவை பயனற்றதாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. மறுபுறத்தில் தனக்குத் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசு முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், தேசிய பேரவை எதற்கு? பெயரளவில் மட்டுமே அது இருக்கப் போகின்றது. ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. தற்போதைய அரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனர்.
எனவே, சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஆளுங்கட்சி
தேசிய பேரவையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது என்றார்
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam