பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள சிக்கல்: தீவிரமடையும் மக்கள் போராட்டம்- செய்திகளின் தொகுப்பு
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த பொதுஜன பெரமுனவினர் அவதானம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தாதுள்ளார்.
அரசியல் இலாபத்துக்காக பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தாமல் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் வெகுவிரைவில் மக்கள் போராட்டம் தீவிரமடையும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு உள்ளக மற்றும் வெளியக பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கம் கூடிய அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது எனவும் அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
