இவரை தெரியுமா..! பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இதன்படி சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
பண்டாரவளை ஹோட்டல் அறையொன்றில் நேற்று (24.08.2023) மாலை பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னர், சந்தேகநபர் தப்பிச் சென்றதுடன், அவரது புகைப்படத்தை பொலிஸார் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் (பண்டாரவளை) - 0718 591523
குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி - 0718 710108 - 0718594033
You may like this



