கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பிடித்துக் கொடுத்த மக்கள் - பொலிஸார் பாராட்டு
வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
மஹரகம நாவின்ன பகுதியிலுள்ள மக்களுடன், பொலிஸாரின் சிறப்பு குழுக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு
கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேக நபர் நேற்றிரவு மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்ற பேரும் அனுராதபுரத்தின் கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பான விசாரணை, பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் பல குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam