சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது: ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்பு (Photos)
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு தேவிபுரம் அ பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான குலசூரிய, ஜெயதிலக, பிரியந்த, குணவர்த்தன, பண்டார, பிரதீபன் ஆகிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவரிடம் இருந்து 20 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபர்களிடம் இருந்து 55 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 375 லிட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் கியூ.ஆர் முறைமை! கஞ்சன விஜேசேகர அறிவிப்பு |
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி 7ஆவது நாளாக தொடர் போராட்டம் (Photos) |