தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி 7ஆவது நாளாக தொடர் போராட்டம் (Photos)
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7 நாள் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை நாவிதன்வெளி 4ம் கொலனி பிரதேசத்தில் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு 4ம் கொலனி ஆலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று பொது திடலில் ஒன்றினைந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசாவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 150ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கையடங்கிய மகஜர் வாசிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து போராட்டகாரர்கள் விலகிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri