சேவையிலிருந்து விலகிச் செல்லும் பொலிஸார் குறித்து வெளியான தகவல்!
கடந்த இரண்டரை மாதகாலத்திற்குள் 260 பேர் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பதவி விலகல் தொடர்பான முன் அறிவித்தல் வழங்காமலேயே அவர்கள் அனைவரும் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் தர உத்தியோகஸ்தர்களே இவ்வாறு பெருமளவில் சேவையை விட்டு விலகிச் செல்வதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பொலிஸ் சேவை
இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையை விட்டு விலக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 900 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam
