இலங்கையில் விமான எரிபொருளுக்கு தொடரும் பற்றாக்குறை: சுற்றுலாத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல்
இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கான தங்களது நடவடிக்கைகளை இடைநிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் |
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தவிர இலங்கை துறைமுக அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பதுங்கு குழி வைத்திருப்பவர்கள்(Jet A-1 )விமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தேவையான ஜெட் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் குறைந்தபட்சம் 30 நாள் கடன் அடிப்படையில் ஜெட் எரிபொருளை வழங்கத் தயாராக இருக்கும் புதிய விநியோகஸ்தர்களை கண்டறிய வேண்டியுள்ளதாக பதிவு செய்யப்பட்ட பதுங்கி குழிகளை வைத்திருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனங்கள் வெளியேறுவது தொடர்பில்
இதற்கிடையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவோ அல்லது வேறு எந்த மாற்று முறை மூலமாகவோ ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் தற்போது இல்லை என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுகின்றன.தற்போதைய நிலவரப்படி சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளன. மற்றும் சில விமான நிறுவனங்கள் வெளியேறுவது பற்றி ஆலோசித்து வருகின்றன.
விமான நிலைய அதிகாரிகளின் கருத்து
அவர்கள் வெளியேறிவிட்டால் அவர்களை திரும்பப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் இலங்கைக்கான விமான இருக்கை திறன் 27.6 சதவீதத்தில் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.