நீண்டகாலமாக தொடரும் கடவுச்சீட்டு வரிசை : உண்மை நிலவரம் என்ன..
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலை உச்சமடைந்திருந்த காலப் பகுதியில் நாட்டில் ஒவ்வொரு சேவைகளையும் பெற்றுக் கொள்ள மக்கள் அங்கங்கே வரிசைகளில் நிற்க நேரிட்டது.
அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமா என்று நினைக்கும் அளவுக்கு தற்போது கடவுச்சீட்டு வரிசை தொடர்கிறது.
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு, இணைய மூலமான விண்ணப்பம், பல கட்டங்களாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் திட்டம் உள்ளிட்ட பல விடயங்களை பொதுமக்களிடத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் முன்வைத்தாலும் கூட கடவுச்சீட்டு வரிசை முற்றுப்பெறுவதாய் இல்லை.
இந்தநிலையில், கடவுச்சீட்டு வரிசை நீண்டகாலமாக தொடரும் நிலையில் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பில் விபரிக்கிறது இந்த காணொளி,
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri