நாட்டை சுத்தம் செய்யும் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும்!
நாட்டில் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படா விட்டால், பாரிய போராட்டம் ஒன்று வெடிக்கும் என அகில இலங்கை பழைய இரும்பு வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் ஒரு முக்கிய பங்காற்றி வரும் ஒரு தொழில்துறை பிரிவு தான் பழைய இரும்பு கடை வியாபாரம்.
பொதுவாக “ஸ்கிராப் வியாபாரம்” என அழைக்கப்படும் இந்தத் துறை, மறுசுழற்சி பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், மரியாதை ரீதியிலும் கூட மிக மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.
இது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள அகில இலங்கை பழைய இரும்பு வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர், மேலும் பல முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டார்.