இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா நீட்டிப்பு
ஈரான் போர் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற முடியாத வெளிநாட்டுப் பிரஜைகளின் வீசா காலத்தை இலவசமாக நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் விசா காலாவதி சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக குடிவரவு மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நோக்கி செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, குடிவரவு மற்றும் குடியேற்ற திணைக்களம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக சிறப்பு நடவடிக்கையாக இலவசமாக 7 நாட்கள் விசா நீட்டிப்பு வழங்க தீர்மானித்துள்ளது.
தற்போதைய விசா காலம் முடிவடையும் திகதியிலிருந்து மேலும் 7 நாட்கள் வரை இந்த விசா நீட்டிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை பயணிகள் சட்டபூர்வமாக நாட்டில் தங்கியிருந்து தங்களின் பயண ஏற்பாடுகளை நிறைவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri