க. பொ. த மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு
இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ திகதிகள்
இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, இந்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
மேலும், இவ்வருடத்திற்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி பின்பு அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
