நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மகுடம் சூட்டிய தரப்பினர்! சஜித் காட்டம் - செய்திகளின் தொகுப்பு
பல நூற்றாண்டுகளாக பெருமையுடனும் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்சர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாகவும், நண்பர் கூட்டம், முதலாளித்துவ ராஜபக்ச குடும்ப வாதம், ஊழல், இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டை இவ்வளவு தூரம் பாதாளத்துக்கு கொண்டு சென்றது ராஜபக்ச குடும்ப வாதமே 2005இல் ராஜபக்சர்களை ஆதரித்து, வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது.
நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார் தான் எனவும் அவர்களே நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மகுடம் சூட்டினாலும், தான் ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடவில்லை எனவும், தான் எப்போதும் பொது மக்களுடனேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றையய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
