பாடசாலை நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - மாணவர்களின் நிலை என்ன!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடநேரமும் 45 நிமிடங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 பாடங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் 6 பாடங்களாக மாற்றம் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு பாடவேளைகள் மாற்றம் பெற்றுள்ளமையால் தங்களுக்கு படிப்பதற்கு அதிக நேரம் கிடைத்துள்ளது என்று மாணவியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்து என்ன என்று லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்களை கீழுள்ள காணாளியில் காணலாம்.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri