ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Bavan Aug 22, 2024 03:54 AM GMT
Report

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குறித்த குழுவினர் நேற்றையதினம் (21) கொழும்பில சந்தித்த போதே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு. எல். எம். என். முபின் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி


முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இந்த ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது,

“ இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வின்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மற்றும் தென் இலங்கை முஸ்லிம்களுக்கு உரிய அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் அத்தோடு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மோசமாக காணி பற்றாக்குறையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு உரிய அவர்களின் இனவிகிதசார அளவுக்கு ஏற்ப காணிப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தகுதியான முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் இருந்த போதும் அம்பாறை திருவோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழ்நிலையில் இதுவரையில் முஸ்லிம் அரசாங்க அதிபர்கள் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

அத்தோடு முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து மாகாண ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

எனவே எதிர்காலத்தில் பொருத்தமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து தகுதியானவர்களை இத்தகைய பதவி நிலைகளுக்கு நியமிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இதுவரையில் முறைப்படியான மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் கடந்த யுத்த காலத்தில் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டன.

அந்த கிராமங்களுக்கான மீள்குடியேற்றமும் உரிய முறைப்படி நடைபெறவில்லை. எனவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இதற்கென ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை அமைத்து மேற்படி மீள்குடியேற்றத்தை செய்து தர வேண்டும்.

1999 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரதேச செயலகமான கோரளை மற்று பிரதேச செயலகம் இதுவரையில் உரிய பிரதேசத்திற்குரிய கானிய அமைப்போடு இயங்கவில்லை. 

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் | Sri Lanka Muslim Congress Announced Support Ranil

இந்நிலையில், அதற்கான அமைச்சரவை தீர்மானம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

காத்தான்குடியின் எல்லை பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான மூன்று அரசாங்க வர்த்தமானி இருந்தும் காத்தான்குடியின் எல்லைகள் தீர்த்து வைக்கப்படவில்லை வர்த்தமானி உள்ளபடி அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரான் கோரளை தெற்கு பிரதேச செயலகத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு என காணியைக் கொண்டிருந்த கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து 155 சதுர கிலோ மீட்டர் காணி எடுக்கப்பட்டு அது கிரான் பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டதால் ஓட்டமாவடி மக்கள் பாரிய காணி பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

எனவே அந்த 155 சதுர கிலோமீட்டர் காணியை மீண்டும் ஓட்டமாவடி மேற்கு கோரளை மேற்கு பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.

அத்துடன், ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 4ஆம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி,எல்லை நகர் கிராமங்கள் 1990 ஆம் ஆண்டு யுத்த நிலைமையின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தோடு தற்காலிகமாக இணைக்கப்பட்டதோடு அது இதுவரை மீண்டும் ஏராவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் அம்மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் | Sri Lanka Muslim Congress Announced Support Ranil

அதேபோன்று ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இயங்குகின்ற ஐயங்கேணி ,மீராகேணி, மிச்சி நகர் போன்ற கிராமங்கள் ஏராவூர் நகர பிரதேச செயலக நிர்வாகத்தினால் முழுமையாக நிர்வாகம் செய்யப்படாமல் ஏராவூர் பற்று பிரதேச செயலகம் அதில் தலையீடுகளை மேற்கொள்கிறது. அதனை முழுமையாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.

காத்தான்குடிகான கழிவு நீர் முகாமை திட்டம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக அதிகமான சனத்தொகையை கொண்ட நகரங்களில் ஒன்றான காத்தான்குடிக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கிற உங்களால் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை கழிவு நீர் முகமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளத்தின் காரணமாக 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 

ஆகவே, காத்தான்குடி கான வெள்ள தடுப்பு திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு புதிய காத்தன்குடியில் மிக அதிகமாக மக்கள் பல்வேறு காணிப் பிரச்சினைகளை நிர்வாக ரீதியாக எதிர்நோக்குகிறனர்.

காத்தான்குடி பிரதேசம் நகர் சபையாக தரம் உயர்த்தப்பட்ட போது அந்த காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. அதனால் தற்போது மக்கள் காணி உரிமையை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் | Sri Lanka Muslim Congress Announced Support Ranil

மேற்படி, பிரச்சினை தீர்த்து வைப்பதற்காக புதிய காத்தான்குடிக்கான பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் பிரகடனப்படுத்துவதோடு அப்பிரதேச சபையோடு பாலமுனை பூனைச்சிமுனை, மஞ்சந் தொடுவாய், கர்பலா மற்றும் ஆரயம்பதி கிழக்கு போன்ற பிரதேசங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதியிடம் கோரிக்கைக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏசி அப்துல் காதர் அப்துல் லெத்நீப், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எச் எம் எம் பாகிர், காத்தான்குடி நகர சபையின் மற்றுமொரு உறுப்பினர் டி எம் எம் தௌபிக் ஜேபி, ஆரையம்பதி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ் அன்சார், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மேற்படி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட வேலை திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒரு புதிய கட்சியை தொடங்கி அதிலே முஸ்லிம் பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த முஸ்லிம் பிரிவொன்றை அமைப்பதனால் முஸ்லிம் சமூக பிரச்சினைகளை கையாள்வதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் குறித்து வெளியான அறிவிப்பு

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் குறித்து வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US