இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்த மாம்பழ உற்பத்தி
இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாம்பழம் விலை குறைவு
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மாம்பழங்கள் பயிரிடப்படுவதாக திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்றுமதிக்காக பயிரிடப்படும் TEJC எனும் மாம்பழம் விலை குறைவினால் உற்பத்தி தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பக்கழக தரவுகளின்படி, இலங்கையில் விளையும் அனைத்து வகையான மாம்பழங்களின் வருடாந்த அறுவடையும் சுமார் 250 மில்லியன் பழங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாம்பழ பருவம்
எவ்வாறாயினும், 2023-24 மாம்பழ பருவம் அந்த அளவைத் தாண்டியுள்ளதாக தற்போதைய தரவு உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
