கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் இல்லை: பந்துல தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம (Homagama) தொகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடன் செலுத்துவதற்கான கால அவகாசம்
இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நெடுஞ்சாலைகளின் வருமானம் மற்றும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் குறித்து அமைச்சர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலின் விளைவாக கடன் மறுசீரமைப்பு இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திட வாய்ப்பு உள்ளதுடன் ஜப்பான் மற்றும் பாரிஸ் ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
