இலங்கையில் விதைப்பை அகற்றத்தின் பின்னணியில் மர்மம் - வைத்தியர் வெளியிட்ட தகவல்
உலகில் எந்தவொரு நாட்டிலும் விதைப்பை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நேற்று தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத இந்த விசேட வைத்தியர், விதைப்பை பொருத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி விதைப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்த நேரிடும் போது அதனை அகற்ற நேரிடும். சில நேரங்களில் மரணங்கள் ஏற்பட கூடும்.

சிறுநீரக விற்பனையில் ஈடுபடும் நபர்களின் வியாபாரத்திற்கு பின்னால் இருக்கும் நபர்கள் சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் பணம் வழங்குவதில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அறுவை சிகிச்சையும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுநீரக விற்பனைக்கு இணையாக விதைப்பை அகற்றும் மர்மகும்பல்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைத்தியரின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam