இலங்கையில் சர்ச்சைக்குரிய ஊசியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முக்கிய தகவல்
அண்மைய நாட்களாக இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் ஊசி மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
ஊசி மருந்து
இதன்போது ஊசி மருந்து, பயன்படுத்தப்பட்டமையால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடாளுமன்றத்தின் பொதுக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊசி மருந்து பாவனையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam