இலங்கை - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கும் முக்கிய தொடர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வன் வேர்ல்ட், வன் ஃபெமிலி (One World One Family) கிரிக்கட் கிண்ணத்தின் இரண்டாவது பதிப்பு 2025 பெப்ரவரி 8ஆம் திகதியன்று கர்நாடகாவில் நடத்தப்படவுள்ளது
சத்ய சாய் கிராமத்தில் உள்ள சாய் கிருஸ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப்போட்டி இடம்பெறவுள்ளது.
கிரிக்கெட்டின் முக்கிய மையங்களான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் ஆற்றல்மிக்க 20க்கு 20 போட்டியாக இது நடத்தப்படவுள்ளது.
மாற்றத்திற்கான ஒரு இயக்கம்
“ஒரு உலகம், ஒரு குடும்பம்" என்பது பண்டைய இந்திய நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றத்திற்கான ஒரு இயக்கமாகும்.

இந்தக் கிரிக்கட் போட்டி, இலவச ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான, குறித்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குறித்த போட்டியில் ஒரே உலகம் என்ற இந்திய அணியின் சார்பில் இர்பான் பத்தான், யூசுப் பத்தான், நாமன் ஓஜா, பத்ரிநாத், அசோக் டின்டா, பியூஸ் சௌலா, அபிமன்யு மிதுன், வெங்கடேஸ் பிரசாத், சுனில் ஜோசி, பார்தீவ் பட்டேல், சுஜித் சோமசுந்தர், மனோஜ் திவாரி ஆகியோர் விளையாடுகின்றனர்
ஒரே குடும்பம் என்ற இலங்கை அணியின் சார்பில் அரவிந்த டி சில்வா, ரி.எம் டில்சான், சமிந்த வாஸ், உப்புல் தரங்க, திசர பெரேரா, தரங்க பரணவிதான, மிலிந்த சிறிவர்த்தன, அசேல குணவர்த்தன, நுவன் சொய்ஸா முத்தையா முரளிதரன், திலான் துசார, அர்ஜூன ரணதுங்க, ரவீந்திர புஸ்பகுமார, அஜந்த மெண்டிஸ், ரொமேஸ் களுவிதாரண ஆகியோர் பங்கேற்கின்றனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri