இலங்கை - இந்திய முதலாவது டி20 போட்டி: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று இரவு 07 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை
எனவே, போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மைதானத்துக்கோ அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் இடத்துக்கோ ரசிகர்களை வர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மைதான நுழைவாயில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
