சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எல்லை தாண்டி சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.

இதையடுத்து குறித்த 22 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவர், இரண்டாவது தடவையாக இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஏனைய 21 கடற்றொழிலாளர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் நீதவான் உத்தவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 20 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam