இலங்கை 2023ஆம் ஆண்டை நல்லிணக்க மீட்சிக்கான ஆண்டாக அடையாளப்படுத்துகிறது: அருணி விஜேவர்தன
இலங்கையில் 2023ஆம் ஆண்டை நல்லிணக்கம், மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய தினத்தை முன்னிட்டு நேற்று (13.03.2023) வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவினால் சமாதானத்திற்கான பொதுநலவாய தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம்
பொதுநலவாய நாடுகளின் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அமைதிக்கான கூட்டு அர்ப்பணிப்பாக உறுப்பு நாடுகளால் அமைதிக்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை ஏற்றுவது, பொதுநலவாயச் செயலகத்தால் இந்த ஆண்டு 'நிலையான மற்றும் அமைதியான பொது எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri