இந்திய - பாகிஸ்தான் மோதலில் இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு
இந்திய - பாகிஸ்தான் மோதலில் இலங்கைக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நமது வெளியுறவு அமைச்சருக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரு தரப்பினருடனும் பேசி சாக் பகுதியை ஒன்றாக வைத்திருப்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வாய்ப்பு விஜித ஹேரத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலீட்டில் அதிகரிப்பு
இதன்போது முதலீட்டில் அதிகரிப்பைக் காணலாம் என்றும், இதனை அதிகரிக்க நாம் பாடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நமது நாட்டு ஏற்றுமதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்கின்றன. இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் GSP விலக்கு காரணமாக ம் அவர்கள் சொல்வதைச் நா செய்ய வேண்டும்.
உடனடி வரி
மேலும், ட்ரம்ப் உடனடியாக வரிகளை விதிக்கச் சொல்கிறார். இது அசாதாரணமானது.

தற்போது, 48 நாடுகள் அமெரிக்காவுடன் பேசி வருகின்றன, மேலும் இது தொடர்பாக இலங்கையின் பேச்சு பற்றி எங்களுக்குத் தெரியாது.
இந்த நாடு ஒன்று அல்லது இரண்டு பேரால் நடத்தப்படவில்லை. 1976 இல் வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற அதிகாரத்தை திறம்பட செயற்படுத்த முடியவில்லை.
அதை நாம் சரிசெய்ய வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri