அதிகரித்துள்ள டொலர் கையிருப்பு! வெற்றிகண்டுள்ள அநுர அரசாங்கம்..
இலங்கையின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் ரூபாய் மற்றும் டொலர் கையிருப்பை வலுப்படுத்துவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டின் டொலர் கையிருப்பு தற்போது 6 பில்லியனைத் தாண்டியுள்ளது. ரூபாய் கையிருப்பு ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளது.
வரி செலுத்தாத ஒரு சில குழுக்களிடமிருந்து வரிப் பணத்தை வசூலிப்பதன் மூலம், இந்த நாட்டில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை 6 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்துள்ளது.
பணத்தை அச்சிடுவதன் மூலமாகவன்றி, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்தைத் தடுப்பதன் மூலம் அந்நியச் செலாவணி மற்றும் ரூபாய் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
