இந்த வருடத்திற்குள் 9 பில்லியன் ரூபா வருமானம் : வெளியிடப்பட்டுள்ள நம்பிக்கை
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 வருடங்களில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, காணிகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தில் மாத்திரம் 9 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்னவின் பணிப்புரை
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இக்காணிகள் பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் அடிப்படையிலும் நீண்ட கால குத்தகை அடிப்படையிலும் திட்ட வாய்ப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ், மேல், தெற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை, வரகாபொல, காலி கோட்டை, அவிசாவளை, தலவத்துகொட, கொட்டாவ, ஏகல, கண்டி, நாரஹேன்பிட்டி, நாவலப்பிட்டி, பலாங்கொடை, கொலன்னாவ, வெள்ளவத்தை, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் அந்தந்த திட்டங்களுக்கு உரிய காணிகள் அமைந்துள்ளன.
இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய வீட்டுத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பல மாடி வாகனம் நிறுத்துமிடங்கள், அலுவலக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள், பொழுதுபோக்கு, சுகாதாரம், கல்வி, கைதொழில்கள் என்று இத்திட்டங்கள் துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தில் இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 2 திட்டங்களுக்கு அரச மற்றும் தனியார் பங்காளித்துவ அடிப்படையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam