வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது!
முல்லைத்தீவு- செம்மலை பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

இச் சுற்றிவளைப்பின் போது, வீட்டில் இருந்த 45 லிட்டர் டீசல், 21 லிட்டர் பெட்ரோல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
| சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு:அனுரகுமார திஸாநாயக்க |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam