சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம்!..தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அதிகாரம் தற்போது யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும்18ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நிமல் சிறிபால டி சில்வா (Nimala Siripala De Silva) தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக் கூட்டத்தைக் கூட்டி பதில் தலைவர், பதில் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.
மைத்திரி தரப்பு விளக்கம்
இந்தக் கூட்டத்தில் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மேற்படி கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் (Chandrika Kumaratunga) பங்கேற்றிருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையிலேயே, கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனத்தின் செல்லுபடி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாகத் தொடர்புகொள்ள வேண்டிய கட்சியின் தரப்பு என்பன தொடர்பில் ஆராயத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 3 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
