கொள்கைகளும், ஆட்களும் இல்லாமல் பெயர் பலகையுடன் மட்டும் இயங்கும் கட்சி: சந்திரிக்கா பகிரங்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(04) செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் குற்றச்சாட்டுகள்

மேலும் தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்தது.
தற்போது அது அழிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இல்லை, கட்சியில் கொள்கைகளும், ஆட்களும் இல்லை. அதற்கு பதிலாக பெயர் பலகை மட்டுமே உள்ளது.
கட்சியின் கொள்கைகளும் மக்களும்

மேலும் எனக்கு கட்சி முக்கியமல்ல. கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம். எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.”என தெரிவித்துள்ளார்.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan