கொள்கைகளும், ஆட்களும் இல்லாமல் பெயர் பலகையுடன் மட்டும் இயங்கும் கட்சி: சந்திரிக்கா பகிரங்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(04) செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் குற்றச்சாட்டுகள்
மேலும் தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்தது.
தற்போது அது அழிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இல்லை, கட்சியில் கொள்கைகளும், ஆட்களும் இல்லை. அதற்கு பதிலாக பெயர் பலகை மட்டுமே உள்ளது.
கட்சியின் கொள்கைகளும் மக்களும்
மேலும் எனக்கு கட்சி முக்கியமல்ல. கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம். எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.”என தெரிவித்துள்ளார்.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
