இலங்கையில் காய்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் காய் கறிகளின் விலைகளில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் காய்கறிகளின் மொத்த விலை 40 சத வீதம் வரை அதிகரித்துள்ளமை தெரிய வருகின்றது.
இந் நாட்களில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை அதிகரித்து, மொத்தமாக காய்கறிகளை வாங்கும் வீதமும் குறைவடைந்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு தற்காலிகமான அதிகரிப்பு

இதன் படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகமான மரக்கறி வகைகளின் விலைகளில் அதிகரிப்பு காணப்படுவதற்கான காரணம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாகும்.
இதனால் பயிர்கள் சேதமடைந்ததன் காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இது ஒரு தற்காலிகமான நிலமை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு பச்சை மிளகாய், போஞ்சி, கறி மிளகாய், கரட், வெள்ளரி, வெண்டைக்காய், உருளை கிழங்கு, பூசணி ஆகியவற்றின் விலைகளிலேயே அதிகரிப்பு நிலை காணப்படுவதாக அங்குள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri