சதொசவில் இன்று முதல் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை
லங்கா சதொசவில் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியலுக்கமைய, உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 430 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பொருட்களின் விலை குறைப்பு

மேலும் வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 278 ரூபாயிலிருந்து 3 ரூபாய் குறைத்து 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராம் 179 ரூபாயிலிருந்து 5 ரூபாய் குறைத்து 174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 228 ரூபாயிலிருந்து 8 ரூபாய் குறைத்து 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடலை ஒரு கிலோ கிராம் 685 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு