இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில்: கடற்றொழிலாளர்கள் விசனம்

Indian fishermen Government Of India Sri Lanka Fisherman
By Kajinthan Oct 18, 2022 08:51 PM GMT
Report

இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பம்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில்: கடற்றொழிலாளர்கள் விசனம் | Sri Lanka Fisherman Sea Leech Problem

"எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தினை கொண்டு வருவதனை வடக்கு கடற்றொழிலாளர்கள் விரும்பவில்லை.

அத்துடன் இந்த செய்தியினால் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவரை இதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்துமாறும் யாழ். கடற்தொழிற்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

கடலட்டை தொழில்நுட்பம்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில்: கடற்றொழிலாளர்கள் விசனம் | Sri Lanka Fisherman Sea Leech Problem

அதேபோல் இந்தியாவில் கடலட்டை தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் கடந்த வாரம் மன்னார் ஓலைத்தடுவாயில் அமைந்துள்ள கடலட்டை உற்பத்தி நிலையத்திற்கு இந்திய முதலீட்டாளர் வருகை தந்து அந்த தொழில்நுட்பத்தை முதலீடு செய்ய இருப்பதாக அறியும் செய்தி எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

இதனை வடக்கு கடற்தொழிலாளர்கள் விரும்பவில்லை. வடக்கில் இந்த கடலட்டை தொழிநுட்பத்தை கொண்டு வந்து வடக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டினை இந்திய அரசாங்கம் செய்யக்கூடாது என்ற செய்தியை இந்திய அரசாங்கத்துக்கு சொல்லவதோடு, யாழ். மாவட்டத்தில் இந்த கடலட்டை தொடர்பான பிரச்சினை நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன இதனை கருத்தில் கொண்டு கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் . ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு சார் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

சட்டவிரோத மீன்பிடி

அத்துடன், தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல் நெடுந்தீவு அனலைதீவு போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17.10.2022) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகவும்,  நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

மேலும், இலங்கைக் கடற்படையினர், இந்திய துணைத்தூதரகம் ஆகியோர் வடபகுதி கடலுக்குள் அத்துமீறி இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலதிக செய்தி:தீபன்

மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US