தமிழர் பகுதியில் 86 ஆவது நாளாக தொடரும் சிறுகடற்றொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
”கிளிநொச்சி- பூநகரி இலவங்குடா கடற்பகுதியில் சிறுகடற்றொழிலுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள புதிய அட்டைப் பண்ணைகளுக்கு எந்தவித நடவடிக்கைகளையும் பூநகரி பிரதேச செயலாளர் எடுக்காது எல்லோரையும் ஏமாற்றும் செயலாகும்” என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறுகடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி இலவங்குடா கடற் பகுதியில் சிறுகடல் தொழிலுக்கு இடையூறாக உள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர்ந்து 86 ஆவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சிறுகடற்றொழிலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த சிறுகடற் பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக காணப்படும் மூன்று அடடைப்பண்ணைகளை மாத்திரம் அகற்றுமாறு பூநகரி பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் படிவங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால் சிறுகடற்றொழிலுக்கு இடையூறாக குறித்த கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 34 க்கும் அதிகமான புதிய அட்டைப் பண்ணைகளை அகற்றுவதற்கோ அல்லது இடம் மாற்றுவதற்கோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
” குறித்த பகுதியில் பாரம்பரியமாக தொழில் செய்து வந்த கடற் தொழிலாளர்கள் சிறுகடற் றொழிலுக்கு இடையூறாக காணப்படும் அட்டைப்பண்ணைகளை அகற்றுமாறு கோரி கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் ஒரு கண்துடைப்புக்காக மாத்திரம் பூநகரி பிரதேச செயலகத்தினால் நீண்ட காலமாக இயங்கிவரும் குறித்த மூன்று அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டு இருப்பது மீனவ சமூகத்தையும் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.
எனவே தொழிலுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும்” என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறுகடற் றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் எமது ஊடகவியலாளர் வினவிய தொடர்பு கொண்டு வினவியபோது,
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று அட்டைப் பண்ணைகளை மாத்திரம் அகற்றுமாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. என்றும் மேற்படி பகுதியில் அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு 82 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருக்கின்றனர்.
இதில் 34 பேர் வரையில் தற்போது
பண்ணைகளை அமைத்துள்ளனர். அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள மூன்று பண்ணைகளுக்கும்
எந்த விதமான அனுமதிகளும் பெறவில்லை. அவர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு
கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதனையும் சீர் செய்ய முடியும்” எனவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
