இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Final War
By Chandramathi May 17, 2023 12:04 AM GMT
Chandramathi

Chandramathi

in சமூகம்
Report

இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் இரசாயண குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக 14 ஆண்டுகள் கடந்து ஒரு முன்னாள் போராளி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் ஈச்சங்குளம் பகுதியில் வசிக்கும் பாபு கஜேந்தினி(36 வயது) விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சைகளை வழங்கும் சுகாதார பிரிவில் மருத்துவ போராளியாக கடமையாற்றியுள்ளார்.

இறுதி யுத்தத்தை மறக்கவே முடியாது

இவர் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lanka Final War 2009 Mullivaikkal Massacre

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நான் போராட்ட காலத்தில் நேரடியாக முன் நிக்கவில்லை.ஏனென்றால் நான் ஒரு மருத்துவ போராளி. நான் பின் தளத்தில் தான் நின்றேன். எமக்கு கள அனுபவம் என்பதை விட களத்திற்கு பின்னால் காயப்பட்ட போராளிகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை செய்து அவர்கள் உயிரை காப்பாற்றிய அனுபவமே இருந்தது.

முதலில் என்னை மாலதி படையணியில் சேர்த்துவிட்டனர். பின்னர் மருத்துவ பிரிவிற்கு சென்று 2008 வரை மருத்துவ போராளியாக பணிபுரிந்தேன்.

இறுதி யுத்தத்தில் வேறொரு பிரிவுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

கருகி இறந்த மக்கள்

என் வாழ்வில் இறுதி யுத்தத்தை மறக்கவே முடியாது. ஒரு இடத்தில் போராளிகளும் பொதுமக்களும் ஒன்றாக தான் சேர்ந்து பங்கரில் இருப்போம்.   சிறு பிள்ளைகளை பங்கருக்குள் அமர்த்திவிட்டு, வெளிப்பகுதியில் நாங்கள் இருப்போம். அங்கு ஒரு குண்டு வீசினால் நாங்கள் அனைவரும் சிதறி போவோம்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் 5 ஆம் மாதம் 10 ஆம் திகதி நான் பங்கர் ஒன்றின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தேன்.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lanka Final War 2009 Mullivaikkal Massacre

இதன்போது இலங்கை இராணுவத்தால் பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் மக்கள் என் கண் முன்னாடியே கருகி இறந்து விழுந்தனர்.

மரம் கருகி கரிக்கட்டையாக விழுவதைப் போன்று மக்கள் கருகி இறந்து கிடந்தனர். அவர்களை சென்று தொட்டு பார்த்தால் கரிக்கட்டை மட்டும் தான் இருந்தது. வேறு எதுவும் இல்லை.

இவ்வாறான பயங்கரமான குண்டு தாக்குதலை நடத்தி தான் இராணுவம் இறுதி யுத்தத்தில் எமது மக்களை அழித்தது.   

பயங்கரமான குண்டு தாக்குதல்

அந்த பயங்கரத்தை சொல்ல வேண்டுமானால், பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக எனது கையின் ஒரு பகுதி கருகியது. இப்போதும் உடலின் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை சதை தான் உள்ளது.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lanka Final War 2009 Mullivaikkal Massacre

அந்த குண்டு என்னை நேரடியாக தாக்கவில்லை. அதன் வெப்பம் மட்டும் தான் என்னை தாக்கியது. அப்படியாயின் அந்த குண்டு முழுமையாக ஒருவரை தாக்கும் போது அவர்களின் நிலையை நினைத்து பாருங்கள்.

அந்த இடம் முழுவதும் ரத்தமும் சதையுமாக இருந்தது. அதில் தான் நாங்கள் நடந்து வந்து வெளியேறினோம். இப்படி வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லும் போது 2009 ஆம் ஆண்டு 5 மாதம் 16 ஆம் திகதி என்னை காட்டிக் கொடுத்ததால், இராணுவம் என்னை கைது செய்தது.

எனக்கு கடுமையான காயங்கள் காணப்பட்டதால், ஐ.சி.ஆர்.சி என்னை பொறுப்பேற்றது.பின்னர் வவுனியா நீதி மன்றத்தின் ஊடாக நான் விடுதலை செய்யப்பட்டேன்.”என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US